என்னவோ மயக்கம்-நிஷா லக்ஷ்மி-8

தன்னைக் கட்டிக்கொண்டிருந்தவனிடமிருந்து வலுக்கட்டாயமாய் விலகி கட்டிலில் அமர்ந்தாள் ப்ரத்யா.

அவனும் அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தவன்,”அப்போ அந்த ராஸ்கல்  மைக் யார் ப்ரத்யா”-கேட்ட போதே அந்த கிளிப்பிங் மனதில் ஓடி அவனை எரிச்சல்ப்படுத்தியது என்பதே நிஜம்.

“.................”

“பதில் சொல்லு ப்ரத்யா.இப்போ பிரச்சனை வீடியோ மட்டுமில்லை.உன் மௌனமும் தான்! நேத்து நான் கோபப்பட்டது தப்புன்னு நினைக்கறியா?”

“நிச்சயமா இல்லை.ஒரு பொண்ணு விருப்பமில்லாமல் ஒரு ஆணை இந்த அளவுக்கு அனுமதிச்சிருக்க முடியாது தானே? என் மனசில உனக்கு கொடுத்த இடத்தை,வேறு யாருக்கோ கொடுத்திருக்கேன்னு நினைச்சு உனக்கு கோபம் வந்ததில தப்பே இல்லை..”

“அப்போ பதில் சொல்லிடு.எனக்கு இன்னமுமே திக் திக்-னு தான் இருக்கு.அதிகமா யோசிக்க கூடாதுன்னு,என்னை நானே ரொம்ப கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்”என்றவனை திரும்பி பார்த்தாள். 

இறுகிப்போய் தான் அமர்ந்திருந்தான்.நம்பிக்கை என்ற விஷயத்தை மீறி..உள்ளுக்குள் ஆத்திரம் வெறுப்பு எல்லாம் வெளிப்படுத்திய வண்ணம் அமர்ந்திருந்தான்.அதற்கு மேல் சோதிக்க மனமில்லை.

“அதுல இருக்கது என் ட்வின் சிஸ்டர் ப்ரத்யூ”

“வாட்....?”

அதிர்ச்சியடைந்தவனை பார்க்க தெம்பில்லாமல் கண்ணை இறுக மூடி தன்னை திடமாக்கிக்கொள்ள முயற்சி செய்தாள்.

“ப்ரத்யா..என்னால நிஜமா இதை நம்ப முடியாது.நீ..நீ என்னை தவிக்க விடாமல் உண்மையை சொல்லிடு ப்ளீஸ்”

அதற்கு மேல் அவளது திட சித்தமெல்லாம் காணாமல் போயிற்று தான்.கண்ணை திறந்த வேகத்தில் அவனது இரு கைக்குள் குழந்தையென அடைக்கலமானாள்.

அவளது இந்த செய்கையில் முதலில் திகைத்தவன் தன் டீ-ஷர்ட்டை நனைக்கும் அவளது கண்ணீரை உணர்ந்த நொடி..அழகு,இளமை,கவர்ச்சி என்ற நிலையை தாண்டிய அன்பை உணர்ந்தவன்,இயல்பாய் தன் பிள்ளையை வருடும் தகப்பனை போல,அவளது தலையை வருடிக்கொடுத்தான்.

“என்னமா,என்ன ஆச்சு”உருகிப்போய் தான் குரல் வந்தது.

அவனது அன்பில் இன்னமுமே அதிகமாய் அழுதாள்.

சில நொடிக்குப்பின்னும் இது தொடர,”என்னை சூடாக்காதடி”-என்ற சொல் மூளைக்கு ஏறிய நொடி வெடுக்கென்று நிமிர்ந்தாள்..

“ஷர்ட்டை நனைச்சுட்டடி..கண்ணில ஹீட்டரா வைச்சிருக்க”கள்ளமில்லாமல் கேட்டதும்,தன் தலையிலையே குட்டிக்கொண்டாள்.

அதைப் பார்த்தவன்,குறுகுறுப்போடு,”நான் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டியா”என்றதும்..

“நீ என் கூட சேர்ந்து ரொம்ப கெட்ட பொண்ணாகிட்ட ப்ரத்யா! நான் நிஜமாவே டபுள் மீனிங்ல தான் சொன்னேன்”கண் சிமிட்டி சொன்னவனை அடிக்க வந்தவள்,அவன் கண் பார்த்து,அப்படியே அவன் நெஞ்சில் ஒட்டிக்கொண்டாள்.

மீண்டும் அவளது தலையை வருடியவன்,”பேஸ் வாஷ் பண்ணிட்டு வா.எனக்கு நிறைய தெரிஞ்சுக்கணும்.நர்ஸ் ஆண்ட்டி எப்போ வருவாங்கன்னு தெரில.கதவை லாக் பண்ணி வைச்சிருக்கதும் சரியில்ல”என்றவன் கதவை வெறுமனே மூடிவிட்டு,சேரில் அமர,முகத்தை துடைத்துக்கொண்டு வந்தவள்,..

“உன்னோட போனைக் கொடு”என்றதும் உடனே கொடுத்துவிட்டான்.

அவன் அருகிலையே அமர்ந்து,அவனுடைய பேஸ்புக் அக்கவுன்ட்டில் இருந்தே,பிரத்யூ என்று நேம் சர்ச் செய்து  ப்ரோபைல் பக்கத்தை கண்டுபிடித்து அவனிடம் காட்டினாள்.

அதில் அச்சு அசலாய் ப்ரத்யாவை போலவே,இல்லையில்லை கொஞ்சம் வேறுபாடு இருந்தது.மூக்கு மட்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல கொஞ்சம் நீண்டிருந்தது.மற்றபடி வேறெந்த மாற்றமுமே இல்லை.

போனை பலமுகமாய் வைத்துப் பார்த்தும்,அருணிடம் பிரமிப்பு விலகவில்லை.அதே பிரம்மிப்போடு,”அப்போ அந்த மைக் இவங்களோட லவரா? இவங்களுக்கு தெரியாமல் யாரோ வீடியோ எடுத்துட்டாங்களா? ஏதாவது நடவடிக்கை எடுத்தாங்களா?”-என் சிந்தனை தரமானது தான் என்பது போல அடுத்தடுத்து கேள்விகளை கேட்க,

கையை இறுக மூடிக்கொண்டவள்,”இது..இது அவங்களாவே விருப்பட்டு..”என்றவளின் கண்ணை நீர் முட்ட,அதை துடைத்துவிட்டு,

“அவங்க ரெண்டு பேருமே சேர்ந்து தான் அதை பப்ளிக்கா..”என்றவளின் குரல் உள்ளே போய்விட்டது,

அருணின் முகம் அருவெறுப்பில் மாறியே விட்டது.போனை கீழே போட்டுவிட்டான்.

“யூ மீன் ஷீ இஸ் செக்ஸ் வொர்க்கர் ஆர்??”என்ற போது,கண்ணை இறுக மூடி..

“இல்ல..இல்ல..அவ அப்படி இல்ல”என்று பெருங்குரலெடுத்து கத்தினாள்.

அவனுக்குமே கோபம் வந்துவிட்டது,எவ்வளவு பெரிய விஷயம்! மறைத்திருக்கிறாள். பொது வெளியில்,அதுவும் அந்த அக்கவுன்ட்டில் ஒன்றல்ல,இரண்டல்ல ,பல வீடியோ ஷேர் செய்த தளம் இருந்தது.அவை யாவுமே தரம்கெட்ட ஆபாச வீடியோவை வைத்து பணம் சம்பாதிக்கும் தளங்கள்.அதை பார்த்ததுமே புரியாமல் இருப்பதற்கு,அருண் என்ன இணைய அறிவே இல்லாத பாமரனா?

பெண்ணை பற்றி அறிய வேண்டுமென்ற எண்ணம் வந்தாலே,பொதுவாய் இது போன்ற தளங்களில் தான் பலர் முதலில் காலடி எடுத்து வைக்கின்றனர்.இதை குறையாகவோ,இல்லை நியாயப்படுத்தவோ உங்களாலோ இல்லை என்னாலையோ கூட முடியாது.அது அவரவர் விருப்பம்.(பொல்லாத தனிமனித உரிமை)

நமது அரசாங்கம் எத்தனை எத்தனையோ வழிமுறைகளில்,இது போன்ற வெளிநாட்டு இணைய தளங்களை முடக்கி தான் பார்க்கிறது..முடியாத பட்சத்தில் ஆபாச வீடியோ எத்தனை சதவீதம் பார்க்கிறார்கள் என்று கணக்கெடுத்து நானும் வேலை செய்யறேன்-ப்பா என்று காட்டிக்கொள்கிறது.அவர்களால் முடிந்தது அவ்வளவே!!

மனிதனின் இனப்பெருக்க முறையை,காம உணர்ச்சி கொண்டு இன்னொரு மனிதனே பார்ப்பது என்பது???-இதுக்கும் தனிமனித விருப்பம் என்பது தான் பலரது பதிலாய் இருக்கும்..டாப்பிக் சேஞ் ஆகிடுச்சோ??

பிரத்யாவின் அழுகை அருணின் கோபத்தை அதிகப்படுத்தவே செய்தது.

“வந்ததில இருந்து பார்க்கறேன் ப்ரத்யா.இது தான் நடந்ததுன்னு சொல்லி முடிக்காம,என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்க.இதுக்கு முன்னாடியே நீ இதை என்கிட்ட சொல்லியிருக்கணும்.மறைச்சதும் இல்லாம,இப்போ இப்படி அழுதுட்டு இருந்தா?”என்றவனை பேசவிடாமல் அவனது சட்டையை பிடித்தவள்,

“உனக்கு முன்னாடியே சொல்லியிருக்கனுமா? எப்படி சொல்ல சொல்ற..என் அக்கா படிக்க பணம் இல்லாம,அவ லவர் கூட கண்டபடி பிட்டு படம் எடுத்துப் போட்டு பிழைக்கிறான்னா? அவன் கூட மட்டும் தான் அப்படி இருக்கா.மத்தபடி அவ ஒழுங்கு தான்னு உன்கிட்ட நான் சில்மிஷம் பண்ணி,உன்னை சமாளிக்கனும்ன்னு நினைக்கறியா”

டீ-ஷர்ட்டின் காலரை பற்றியிருந்தவளிடமிருந்து பிரித்தெடுத்தவன்,அவளை கட்டிலில் தள்ள,நிலை தடுமாறினாலும் அமர்ந்துவிட்டாள்.

கோபம் கொஞ்சமும் குறையாமல்,”என்னைக்காவது நான்,நீ என்னை அப்படி இப்படி தொட்டு சமாதானம் செய்யனும்னு நினைச்சிருக்கனா? இல்லை அப்படி உன்னை செய்ய வைச்சிருக்கனா..அப்படியே செய்தாலும் அதுல என்ன தப்பு இருக்கு.நமக்குள்ள..நம்ம ரெண்டு பேருக்குள்ள எதுவுமே தப்பு இல்லை..புரிஞ்சுதா?”

இல்லை-என்று உணர்த்தும்படியாய் தலையை இடவலமாய் ஆட்டியவள்,தலைகுனிந்து அமர்ந்துவிட்டாள்.

“உனக்கு புரியல அருண்.இங்க நான் பணத்தை செலவு பண்ண முடியாமல் தவிச்சுட்டு இருக்கேன்.ஆனால் அங்க அவளோட நிலை? சில டாலருக்காக நாம மதிக்கற காதல் உணர்வை அப்பட்டமா பலருக்கு காட்டிட்டு இருக்கா..ஏன் இப்படி நடக்குது.இப்பவும் என்னால இதை தடுக்கவே முடியலையே”-அழுகை கூடிக்கொண்டே போக,

“உன் சிஸ்டர்-க்கு பணம் தான் பிரச்சனையா? அவங்களுக்கு தேவையான பணத்தை நானே கொடுத்துடறேன்.என் தாத்தாவுக்கு மட்டும் தெரிஞ்சுடுச்சுன்னா,நாம சேர வாய்ப்பை இல்லை.இதையெல்லாம் ஏன் முன்னாடியே சொல்லலை”என்றதும்,கண்ணீரை துடைத்துக்கொண்டே நிமிர்ந்தவள்,

“என் பேமிலி பேக்கிரவுண்ட் இது தான்.இப்போ என்னை லவ் பன்றியான்னு என்கிட்ட ப்ரொபோஸ் பண்றவன்-கிட்ட எல்லாம் நான் சொல்லிடனுமா அருண்..நீயும் சில நாட்கள் முன்ன வரைக்கும்,எனக்கு க்ளோஸ் இல்லை”எனவும் அமைதியாகிவிட்டான்.

அவனுக்கு புரிந்தது தான்.இதையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது தான்.சொல்லியிருந்தால் நேற்றைய துன்பம் ஏற்பட்டிருக்காது என்ற சுயநல எண்ணத்தினால் தான் கோபப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்றும் விளங்கியது தான்.

இத்தனை நாளும் பார்க் பக்கம் யாரும் கையில் செல்போன் வைத்து போட்டோ எடுத்தால் கூட அவளுக்கு பதட்டம் வருவது இதனால் தான் என்பதையும் புரிந்துகொண்டான்.

இருவருக்குமிடையேயான அமைதியை கலைக்க வந்து சேர்ந்தார் நர்ஸ்.

“தற்கொலை கேஸா? ம்ம்ம்”சிரிப்புடனே கேட்டுக்கொண்டு அமைதியாய் அவள் அருகில் வந்தவர் ரிப்போர்ட்டை மறுபடியும் பார்த்துவிட்டு,

சாந்தமான முகத்துடன்,”உன்னோட பிளட் குரூப் ரொம்ப ரேர் ப்ரத்யா மேடம்.இதையெல்லாம் இப்படி வெட்டி வேஸ்ட் பண்ணக் கூடாது.பிளட் பேங்க்ல கொடுங்க.யாராவது ஒருத்தரோட வாழ்க்கை  காப்பாத்தின மன அமைதி கிடைக்கும்.மனவலி போயிடும்”மெல்லிய சிரிப்புடன் அவளது தவறை புரிய வைக்க,

அவளையும் அறியாமல்,”இனி இப்படி செய்ய மாட்டேன்”என்று உறுதி கொடுத்தாள்.அந்த நர்ஸ்-க்கே ஆச்சர்யம் தான்.

“தேங்க்யூ”என்றவர்,அவரது வேலையை முடித்துவிட்டு சென்றுவிட்டார்.

மீண்டும் ஒருமுறை சென்று முகத்தை கழுவிவிட்டு வந்தவள்,அவனது முகத்தை சலனமில்லாமல் பார்த்தபடி,”அப்பா அம்மா நியூயார்க்ல தான் இருந்தாங்க.ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சு.நான் அப்பாகிட்ட! பிரத்யூ அம்மாகிட்ட! அம்மாவோட மூணாவது ஹஸ்பன்ட் அவங்களை ஏமாத்தி,என் அப்பா கொடுத்த சொத்தை எல்லாம் எழுதி வாங்கிட்டான்.அதுக்கு முன்னாடியே பிரத்யூ அவங்களை விட்டு தனியா வந்துட்டா.அவளோட செலவை அவ தான் பார்த்துக்கணும்.பார்ட் டைம் ஜாப்ல எதுவும் செய்ய முடியலை போலிருக்கு”-அழுகையை கட்டுப்படுத்தியவள்,

“அது தான்..இப்படி! அங்க இருக்கவங்க சிலர் இப்படி வேலை செய்யறது சகஜம்..அதுவும் அவ மாடலிங் பண்ணிட்டு இருந்தா..அது எப்படியோ தவறான பாதையை,அவளுக்கு சரின்னு தோண வைச்சிடுச்சு.அம்மாவுக்கு இது தெரிஞ்சு ரொம்ப உடைஞ்சு போய் இந்தியா வந்துட்டாங்க..அப்போ ஒரு நக்சலைட் தாக்குதல்ல அவங்க இறந்த பின்னாடி,போலிஸ் விசாரணை நடந்த போது தான் எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கற விஷயமே தெரியும்.அப்பா யார்கிட்டவும் சொல்லலை.என்னோட எட்டு வயசுலேயே அவரும் இறந்துட்டார்.அதனால சொல்லாம விட்டிருப்பார்”என்று தகப்பனுக்கு நியாயம் கற்பித்தவள்,

“விஷயம் தெரிஞ்சு இந்தர் மாமா,பிரத்யூவை இங்க வரவைக்க அவளோட வாழ்க்கையை மாத்த ரொம்ப ட்ரை பண்ணார்.அவளுக்கு அந்த வாழ்க்கை முறை தப்பா தெரியலைன்னு விவாதம் பண்ணவ,நாங்க கொடுத்த பணத்தை வாங்கவே இல்லை.என்கிட்ட பேசவே இல்லை.எனக்கு தான் குற்ற உணர்ச்சி.நான் மட்டும் எல்லா சுகத்தையும் அனுபவிச்சிட்டு இருக்கேன்னு ரொம்ப உறுத்தலா இருந்துச்சு.நேத்து நீ வேற அந்த வீடியோ பார்த்ததா சொன்னதும்,ஏன் இப்படி நடந்துச்சுன்னு குழப்பத்தில,கையை கட் பண்ணிக்கிட்டேன்.இதை நீ உன் தாத்தாகிட்ட தாராளமா சொல்லலாம்,”

“முடிஞ்சா இப்போவே சொல்லிடு.என்னால எல்லாம் மேரேஜ் அப்புறம் உன் அம்மா மாதிரி வாழ்க்கை முழுவதும் ஹஸ்பன்ட் வீட்டுக்குள்ள நுழையாம,வேலையாள் மாதிரி,வெளில தங்க முடியாது.அவர் சம்மதிக்கலைன்னா இப்போவே ரிலேஷன்ஷிப் கட் பண்ணிக்கலாம்.இன்னையோட அழுது இதுக்கும் முற்றுப்புள்ளி வைச்சிடறேன்”நிறுத்தாமல் பேசிக்கொண்டே செல்ல,

“எனக்கு யோசிக்க டைம் வேணும்”என்றான்.

“ஓ..”என்றவள்,அமைதியாய் படுத்துக்கொண்டாள்.

அருணிற்கு சிரிப்பும் கோபமும் ஒருங்கே எழுந்தது.நிச்சயமாய் காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்கப் போவதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறான்.

எல்லாம் தெரிந்திருந்தும்,”ப்ரேக் அப் பண்ணிக்கலாம்”என்றால்,தன்னை வெறுப்பேற்றி..இல்லையில்லை தன் அன்பை சோதித்து பார்க்கிறாள்..காதலின் உறுதித்தன்மையை அளவிட நினைக்கிறாள் என்று அருணிற்கு புரியாது தான் போகுமா??


ஆனாலும் அவளது குடும்ப பின்னணி,இவனை கலங்கடித்தது. அம்மாவிற்கு மூன்று கணவன்.சகோதரி செய்யும் வேலையோ???-இதையெல்லாம் வீட்டில் சொல்ல முடியுமா? சொல்லவில்லை என்றால் வீட்டில் பெரியவர்கள் விசாரித்து அறிந்துகொள்ளாமல் தான் போவார்களா? –அருணிற்கு இந்த காதல் அவசியமானது தானா என்ற எண்ணம் தானாகவே உருவாகிவிட்டது.

No comments:

Post a Comment