2
சுற்றுலா முடிந்து கல்லூரி திறந்தும் சில
நாட்களாகிவிட்டன.இன்னமும் அருண் தன்னால் ஆன மட்டும் பிரத்யாவை சமாதானம் செய்ய
போராடிக் கொண்டிருந்தான்.
அவன் மேல் அவளுக்கு கோபம் போகவே இல்லை.கடல் அலை எப்போது
எப்படியிருக்கும் என்று யாருக்கு தெரியும்.அலை உள்ளுக்குள் இழுத்திருந்தால் என்ன
ஆவது..
யோசிக்காமல் நீருக்குள் மூழ்கிய அவன் செய்கையை இப்போது
நினைத்தாலும் எரிச்சலாய் இருந்தது.
அதே கோபத்துடன் ஹாஸ்டல் அறையில் அமர்ந்திருந்தவளின் எதிரில்
வந்து நின்றாள் ஷெரின்.
“பிரத்யா”
“என்ன ஷெரின்.ஏன் இப்படி கோபமா பார்க்கறா”
“எல்லாம் உன் ஆளால தான்”
“அருண்-ஆஅ..அவன் என்ன பண்ணான்.பொண்ணுங்ககிட்ட வம்புக்கு போக
மாட்டானே”என்றவள் கால் நகத்திற்கு பாலிஷ் போட ஆரம்பிக்க..அதை பிடுங்கி எறிந்த
ஷெரின்,
“வம்புக்கு போக மாட்டானா..அவனும் அவன் கேங்கும் என்னை
கேவலமா கமென்ட் பண்ணிட்டாங்க தெரியுமா”அழுகையில் மூக்கு சிவந்து போனது.
“என்ன பண்ணான்..”
“நான் மார்னிங் ஜாகிங் போயிருந்தேன்.என் டிரெஸ்ஸை
பார்த்துட்டு...”என்றவள் மீண்டும் அழ தொடங்கிவிட்டாள்.
அருகிலிருந்த ரேவ்ஸ் விவரமாய்,”அது ஒண்ணுமில்ல பிரத்யா.நம்ம
ஷெரின் ட்ரெஸ் கொஞ்சம் முன்னாடியும்..கொஞ்சம் பின்னாடியும் கவர்ச்சியா
இருந்துச்சா.நம்ம பசங்க கண்ணுக்கு எப்படி தப்பும்..இன்னும் கொஞ்சம் லூசா ட்ரெஸ்
போட்டா,எங்களுக்கு ஸ்ட்ரக்சர் நல்லா தெரியும்லன்னு இவ பின்னாடியே போய் கமென்ட்
அடிச்சிருக்கானுங்க”
“ஹ ஹா..இதுக்கெல்லாம் என் ஷெரின் அழ மாட்டா.வேற என்னவோ
நடந்திருக்கு..சொல்லு ஷெரின்.என்ன நடந்துச்சு”
“ஹ்ம்ம்..ம்ம்...என்னை சப்ப பிகர்னு சொல்லிட்டான் அந்த
எருமை மாடு”எனவும் ரேவ்ஸ் பிரத்யாவை பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.
ஒருவேளை இன்னும் கொஞ்சம் லூசா ட்ரெஸ் பண்ணா..அழகா
இருக்கும்’என்று கமென்ட் கொடுத்திருந்தால்,நிச்சயம் உடையில் இன்னும் கொஞ்சம்
கவர்ச்சி காட்ட ஷெரின் தயங்கியிருக்கவே மாட்டாள்.அவளது குடும்பமே மாடலிங் துறையை
சேர்ந்தது..சமயத்தில் 2 பீஸ் ட்ரெஸ் அணிந்து ஹாஸ்டலில் கவர்ச்சி நடனம் ஆடவும்
தயங்கமாட்டாள்..இது அவங்க புரபஷன்.இதில் அழகு கவர்ச்சி என்பதை தாண்டி அவளுக்கு வேறெந்த
கெட்ட பண்பும் கிடையாது.எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவாள்.
அழுகை நின்றபாடில்லாமல் இருக்க,”ஷெரின்,நான் சாரி கேட்க
சொல்றேன்.அருணும் சேர்த்து அப்படி சொன்னானா”சந்தேகமாய் கேட்க..
“இல்ல.ஆனால் அவங்க சொன்னதுக்கு சிரிச்சுட்டே
இருந்தான்.அப்போ தப்பு தானே”என்றாள்.
“தப்பு தான்.நான் சாரி கேட்க சொல்றேன்.நீ வொரி பண்ணிக்காத”
“தேங்க்ஸ் பிரத்யா”கன்னத்தில் முத்தமிட்டு செல்ல,
“ஜாகிங் போறதுக்கு கூட லிப்ஸ்டிக் போட்டுட்டு போறா.என்
கன்னம் தான் சிவந்து போச்சு”கன்னத்தை துடைத்துக்கொண்டே சொல்ல..அலைபேசி அழைத்தது.
அதையெடுத்த ரேவ்ஸ்,”அருண் தான்.அவனை ரொம்ப
வருத்தெடுக்காதே.அக்செப்ட் பண்ணிடு.இல்லை நான் கொத்திட்டு போயிடுவேன்”
“முயற்சி பண்ணு ரேவ்ஸ்.எனக்கும் ஒரு தெளிவு வரும்”
“புரிலையே”
“அது அப்படித்தான்”என்றவள் போனை ஆன் செய்ய..
“பிரத்யா..இன்னைக்கு வெளில போகலாமா”என்றான்.
“எதுக்கு”
“சின்னதா ஒரு டிஸ்கஷன்”என்றான்..பேச்சில் ஒரு தீவிரம்.
“சரிங்க மகராஜா..எங்க வரணும்”
“நம்ம பார்க்கிற்கு தான்”எனவும் ஜெர்க் ஆனாள்.
“என்ன”என்று கேட்டதுமே புரிந்தவனாய்,
“லவ் பண்ண கூப்பிடலடி.ரொம்ப முக்கியமான விஷயம்.சீக்கிரம்
வா.நான் அங்க போயிட்டு இருக்கேன்”எனவும் கிளம்பிவிட்டாள்.நேற்று சொன்ன ஐ ஹேட் யூ
எல்லாம் பிரத்யாவின் நினைவிலையே இல்லையாக்கும்!!
பார்க்கிற்கு வந்த உடனையே,”உட்கார்ந்து பேச நேரமில்லை
பிரத்யா.எனக்கு கிளாஸ்க்கு நேரமாச்சு.நடந்துட்டே பேசுவோம்.எனக்கும் ரிலாக்ஸா
இருக்கும்”என்றவன் அவளது கையைப் பிடித்துக்கொண்டே மலைப்பக்கம் ஏறினான்.
சிறிது நேரம் அவன் பேசாமலையே இருக்கவும்,”இப்படி
நடக்கறதுக்கு தான் வர சொன்னியா..நான் போறேன்”-இறங்க முயன்றாள்.
“கொஞ்ச நேரம் நான் சந்தோஷமா இருந்தா உனக்கு
பிடிக்காத”-திடீரென்று கோபத்தைக் காட்ட திகைத்துப் போனாள்.
“இப்போவெல்லாம் உன்னை பார்த்துட்டே இருக்கணும்.நேரம்
பார்க்காமல் பேசிட்டே இருக்கணும்.நல்லா ஊர் சுத்திட்டே இருக்கணும்..இப்படி ஆசை
நிறைய தோணுது.உனக்கு அப்படி இல்லையா”
“ஆசை இருக்கு தான்”சத்தமே வராமல் சொல்ல,
நடையை நிறுத்தி அவள் பக்கம் திரும்பி,தோள் தொட்டு“எனக்கு கேட்கலை..என்ன
சொன்ன”என்றான்.
அவளுக்கோ தவிப்பு.அவசரப்பட்டு வாய்விட்டோம் என்று..ஆனாலும்
அவனுக்கு கேட்கவில்லை என்பதில் ஏமாற்றமும் சந்தோஷமும் கூட.விந்தையான மனநிலை
இல்லையா!!
அதனாலையே அவனது கண்ணை பார்க்க முயலாமல் அவன் பின்புறம்
பார்வையை சுழல விட அதிர்ந்து போனாள்.அவளை சுற்றியிருந்த மாயவலை அறுந்துவிட்டது போல
பிரம்மை..மூளை சுத்தமாய் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
“என்ன பிரத்யா.பதில் சொல்லு”என்று அவன் உலுக்கவும் தான்,
“ராஸ்கல்..இதுக்கு தான் இங்க கூட்டிட்டு வந்தியா”மெல்ல
கடிந்துகொண்டவள் நொடியும் தாமதிக்காமல் அவனை இழுத்துக்கொண்டு கீழே இறங்கினாள்..
புரியாமல் அவன் திரும்பி பார்க்க முயல,”அங்க என்ன
பார்வை..வந்து தொலை”என்று அவன் முதுகை தள்ளிக்கொண்டு கீழே போனாள்..ஆனால் என்ன
அவனும் பார்த்துவிட்டான்.
அங்கே ஒரு ஜோடி..ஹார்மோன் கிளர்ச்சியை அனுபவித்துக்
கொண்டிருந்தார்கள்.
அதன்பின் அவனும் நடையில் வேகத்தை கூட்டினான்.கீழே வந்த போது இருவருக்குமே
மூச்சு வாங்கியது..பிரத்யாவிற்கு கண்ணீரே வந்துவிட்டது.
“சாரி பிரத்யா.வெரி சாரி.நான் உன்னை இப்படியெல்லாம்
சீண்டறதுக்காக வர சொல்லவே இல்லை.என்னை நம்பற தானே”என்றவன் அவள் கண்ணை பார்க்க முயல,நிமிரவே
இல்லை.
இங்கே இதெல்லாம் சாதாரணம் தான்..இது ஒன்றும்
புதிதில்லையே.பிறகேன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறாள் என்று புரியாமல் நொந்து
போனான்.
“பிரத்யா”என்று அதட்டவும் தான் நிமிர்ந்தாள்.
“இந்த மாதிரி ப்ரீ ஷோவை காட்டி தான்,உன்னோட நான் க்ளோஸ்
ஆகணும்னு எனக்கு அவசியமே இல்லை..செக்ஸ் அடிப்படையா வைச்சு உன்னை ஈர்க்க நான்
விரும்பலை.இது நம்ம லைப்ல ஒரு பார்ட்.அவ்ளோ தான்.அதுக்கு நான் மதிப்பு
கொடுப்பேன்..புரியுதா”அதட்டியதும் தான் ஒருநிலைக்கே வந்தாள்.
அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவன்,அவளையும் இழுத்து அமர
வைத்து,”ரிலாக்ஸ்..இனி இந்த ஏரியா தாண்டி உள்ள போகவே வேண்டாம்..ஓகேவா”எனவும்
தலையாட்டினாள்.
“gud girl.இப்போ விஷயத்துக்கு வரேன்.நான் வேலை செய்யற
இடத்தில ஒரு வேகன்சி இருக்கு.நீ அப்ளை செய்யறியா.வேலை கிடைச்சிடும்.எனக்கு உன்கூட
ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு போல இருக்கு.இந்த உணர்வை என்னால கண்ட்ரோல்
பண்ணவே முடியலை..ரொம்ப நாளா யோசிச்சு தான் இந்த ஐடியாவே கிடைச்சுது.என்ன சொல்ற”
“நான் ஏன் அப்ளை பண்ணனும்.எனக்கு உன்னை மாதிரி எதுவும்
தோணலை”
“ஹப்பா..பிரத்யா நார்மலுக்கு
வந்துட்டா..வந்துட்டா..வந்துட்டா”சத்தம் போட்டு கூவவும் சிரித்துவிட்டாள்.
“அருண்..உன்னை மாதிரி நான் டேலன்ட் கிடையாது.ஒரே சமயத்தில
பல வேலை செய்யற திறமை எனக்கு இல்லவே இல்லை.நானெல்லாம் ஷோக்காக படிச்சிட்டு இருக்க
ஆள்.இதுல கம்பியூட்டர் சென்டர்ல வந்து கிளாஸ் எடுக்க சொல்றியா.அங்க படிக்கறவங்க
பாவம்பா.என்னை விட்டுடு”எனவும் அடமாய் பேசாமல் அமர்ந்துவிட்டான்.
அவள் தான் இறங்கி வர வேண்டியிருந்தது.
“நான் நீ எடுக்கற கிளாஸ்ல ஸ்டுடென்ட்டா வேணா ஜாயின்
பண்ணிக்கறேன்”எனவும் கண்களில் பளபளப்போடு திரும்பி அமர்ந்தான்.
“ரியலி.அப்போ சேர்ந்தே கிளாஸ் போயிட்டு,திரும்பி ஒண்ணாவே
வந்துடலாம்.பைக்ல போனா கிக்கா தான் இருக்கும்.ஆனால் சரியா பேசிட்டு வர
முடியாது.கார்ல போகலாம்னா,தாத்தா வேவு பார்த்துட்டே இருப்பாரே.என்ன
செய்யலாம்”தலையை தட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.
அவள் குறும்பு பார்வையோடு பார்த்துக்கொண்டிருக்க,அதை
கவனித்துவிட்டவன்,”உனக்காக நான் எவ்வளவு யோசிக்கறேன்.எனக்காக நீ எதையும் யோசிக்க
மாட்டியா”கிட்டத்தட்ட கத்தினான்.
“நான் எதுக்கு யோசிக்கணும்.நீ தான் என்னை லவ் பண்ற.நான்
இல்லை..எனக்கு அந்த ஏசிபி கூட”என்று சொல்லி முடிக்கும் முன் அவள் வாயை
அடைத்திருந்தான்..அட கையால தான்பா(வெவ்வவே)!!!
“இனி அந்த கிழவன் பேரை சொன்ன,எதையும் யோசிக்காமல்
கடத்திட்டு போயிடுவேன் பார்த்துக்கோ”
“ஹ ஹ ஹா..நீயா..அதுவும் என்னை கடத்துவியா..போடா..போய் வேலை
இருந்தா பாரு”அசால்ட்டாக சொல்லிவிட்டு அவள் நகரவும்,விடாப்பிடியாய் மீண்டும் அமர
வைத்தான்.
“நீ என்னை ரொம்ப டீஸ் பண்ற”
“ஹ்ம்ம்..அப்படியே இருக்கட்டும்.இப்போ நான்
கிளம்பட்டுமா.கிளாஸ் வரதுக்கு மாமாகிட்ட பர்மிஷன் வாங்கணும்”என்றதுமே கோபம்
வந்துவிட்டது.
“அது எப்படிடி உங்களால இப்படியெல்லாம் பேச முடியுது.நான்
கூப்பிடற இடத்துக்கு வருவாளாம்.நான் கிஸ் பண்ணா,துடைச்சிட்டு எதுவுமே நடக்காத
மாதிரி பேசுவாளாம்..ஐ ஹேட் யூன்னு ஆயிரம் முறை சொல்லிட்டு,இப்படி ஒட்டி உரசிட்டு
உட்கார்வீங்களாம்.ஆனால் கல்யாணம்னு பேச்சு வந்தால் மட்டும்,நான் உன்னை
காதலிக்கவேயில்லை.அதுக்கு என் மாமன் இருக்கான்,மச்சான் இருக்கான்னு கடுப்பேத்த
வேண்டியது..பொண்ணுங்க எல்லாம் சரியான தில்லாலங்கடி தான்..அதுலையும் நீ
இருக்கியே..சரியான கேடி.420 கிரிமினல்”
இவ்வளவு திட்டியும் காதில் எதுவுமே விழாதது போல சுற்றியுள்ள
மரம் செடிகளையும்,கீழிருந்த கல்லையும் ஆர்வமாய் பார்ப்பது போல நடிக்க வேறு
செய்தாள்.
“சரியான இம்சை”
உதட்டை பிதுக்கிவிட்டு மறுபடியும் கண்ணாலே கழகம் செய்தவளை
இழுத்து கன்னம் சிவக்க அழுத்தமாய் ஒன்று கொடுத்தான்...(அடின்னு நினைச்சா கம்பெனி
பொறுப்பில்லையாக்கும்)
ஒருநொடி திகைத்தாலும் வழக்கம் போல அவன் பக்கம்
திரும்பாமலையே,கன்னத்தை துடைத்துவிட்டு சாவகாசமாய் கால் ஆட்டிக்கொண்டே வேடிக்கை
பார்த்தாள்.
சாதாரண ஆட்களுக்கு கடுப்பாகியிருக்கும்..காதல் மயக்கத்தில்
இருப்பவனுக்கு கடுப்பு எங்க வரும்..காதல் தான் கன்னாபின்னான்னு வந்து
தொலைக்குது.எல்லாம் ஹார்மோன் செய்யும் மாயம்..ஒண்ணுமே செய்ய முடியாது!!!!
பிரத்யாவிற்கு ஷெரினிடமிருந்து மெசேஜ் வந்திருக்க,ஞாபகம்
வந்தவளாய்,”அருண்ண்ண்ண்ண்..ஏன் ஷெரினை கேவலமா கமென்ட் பண்ணிங்க..அவகிட்ட சாரி
கேளு”என்றாள்.
“நான் எதுக்கு சாரி கேட்கணும்”
“அப்போ உன் பிரண்ட்ஸ் கேட்க சொல்லு”
“பிரத்யா..உன்னை லவ் பண்ற காரணத்துக்காக என்னால நீ சொல்ற
மாதிரியெல்லாம் நடக்க முடியாது.மோரோவர் நான் கேட்க சொன்னாலும்,என்னை தான்
திட்டுவானுங்க..இது எனக்கு அவசியமில்லாதது”
“ஹோ.அப்போ என்னை இந்த மாதிரி கிண்டல் பண்ணாலும்
இப்படித்தான் சொல்லுவியா”
“நீ என் கேர்ல்பிரண்ட் ஆச்சே.ஸோ அப்படியெல்லாம் செய்ய
மாட்டாங்க.இது ரூல்ஸ்”
“---- ரூல்ஸ்”என்று கேவலமாய் திட்டவும்,
“ரொம்ப ஓவரா போற பிரத்யா..ஷெரினை எல்லாரும் கமென்ட் பண்ணும்
போது,நான் மட்டும் ரொம்ப நல்லவனா பேசினா,என்னை ஞானப்பழம்னு கிண்டல்
பண்ணுவானுங்க..பிரச்சனை பெரிசாச்சுன்னா உன்னையும் அந்த மாதிரி கமென்ட் பண்ண
தயங்கமாட்டாங்க.அதுமட்டுமில்லாம பொண்ணுங்க அப்படி இப்படி ட்ரெஸ் பண்ணா..பசங்க
பார்க்கதான்டி செய்வாங்க.நீங்க தான் அடக்க ஒடுக்கமா இருக்கணும்”
ஷெரினிடம் சாரி கேட்க சொல்கிறேன் என்று ஜம்பமாய்
சொல்லியாயிற்று.இப்போது அது நடக்காது என்பதால்,அது கோபமாய் உருமாறி,அருணை தான்
தாக்கியது.
“உன்கிட்ட இருந்து நான் இந்த பதிலை எதிர்பார்க்கலை..ஐ...”
“ஹ ஹா..ஐ ஹேட் யூன்னு தான சொல்லப்
போற..சொல்லு..சொல்லு..ஐயம் வெய்டிங்.இது 76 வது முறை”
“எனக்காக இது கூட பண்ண மாட்ட..உனக்காக நான் ஏன்டா எதுவும்
செய்யணும்”
“லூசு மாதிரி பேசாத பிரத்யா”
“நான்..நான்..நானா லூசு..நானா லூசு...”வேகமாய் மூச்சுவிட்டு
கேட்டவள்..
“நீ தாண்டா கிறுக்கன்”என்றவள்..ஓடியே போய்விட்டாள்..
அருணுக்கு கோபமாய் வந்தது..காலால் தரையை
உதைத்தவன்,..”நானா..கிறுக்கன்”என்று கத்தியவனின் பின்னால் ஒரு கரம் படிந்தது.
“பாஸ்.பிரேக்அப் ஆகிடுச்சா..நான் வேணா ட்ரை பண்ணட்டுமா”என்றவனின்
அருகில் அவனது காதலி(?) இருந்தாள்.
“அடிங் கொய்யால...ஓடிப் போயிடு..இல்ல உருப்படியா வீடு போய்
சேர மாட்ட..”
“சாரி பாஸ்..ப்ரேக்அப் ஆனால் மறக்காமல்
சொல்லிடுங்க”என்றவனின் சட்டையை கொத்தாய் பிடிக்க..அது ஏற்கனவே கசங்கி போய் தான்
கிடந்தது..முகத்தை முழுதாய் பார்த்த பின்னர் தான்..சற்று முன் கலவரமாய் பார்த்த
ஜோடி என்பதே தெரிய..அந்த பெண்ணை பார்க்கவே மனமில்லாதானாய்,
“நான் அடிக்கறதுக்குள்ள போயிடு”கோபமாய் கத்தவும்,அவனது
குரல் எதிரொலியாய் திருப்பி கேட்டது.பயந்து தான் போனான்.
நடுக்கத்தை மறைத்து“நீ வா டார்லிங்” என்று அழைத்துக்கொண்டு
போய்விட்டான்..அந்த பெண் ட்ரக்ஸ் உபயோகித்திருப்பாள் போல..பதுமையாய் அவன்
பேச்சுக்கு கட்டுப்பட்டு போய்க்
கொண்டிருந்தாள்..
அவன் சென்ற பின்னும் அருணுக்கு எரிச்சலாய்
இருந்தது.மீண்டும் தரையை எட்டி உதைக்க..மண் அவன் மேலையே விழுந்தது..
எங்கிருந்தோ,”இதுக்கு பேர் தான் தன் தலையில தானே மண்ணை
அள்ளிப் போட்டுக்கறது”என்ற குரல் கேட்டது..
“ஏய்..நீ இன்னும் போகலையா..”
“இதோ போயிட்டேன்..போயிட்டேன்.”என்ற குரலோடு கேட்ட காலடி
சத்தத்தின் பின்னே..அருணும் போனான்..சந்தேகமே வேண்டாம்..பிரத்யா பின்னாடி தான்
போறான்..சரியான கிறுக்கன்.
No comments:
Post a Comment